என் மலர்

    செய்திகள்

    பனை ஓலையில் வேளாங்கண்ணி தேவாலயம்
    X
    பனை ஓலையில் வேளாங்கண்ணி தேவாலயம்

    பனை ஓலையில் வேளாங்கண்ணி தேவாலயம்- தூத்துக்குடி தொழிலாளி அசத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி தேவாலயத்தை பனை ஓலையில் தூத்துக்குடியை சேர்ந்த பனை தொழிலாளி தத்ருபமாக உருவாக்கி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 60). பனை தொழிலாளி. இவர் பனை ஓலையில் 7 அடிய உயர காமராஜர் சிலை, அப்துல் கலாம் சிலை, உழவன் சிலை, பள்ளி செல்லும் குழந்தைகள் சிலை என பல்வேறு சிலைகளை தத்ருபமாக உருவாக்கி உள்ளார்.

    ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அவரது 7 அடி உயர சிலையை பனை ஓலையில் செய்து இருந்தார்.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி தேவாலயத்தை பனை ஓலையில் செய்து தத்ருபமாக வைத்துள்ளார். இதை ஏராளமானோர்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.




    Next Story
    ×