என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோரிசோலா அணையில் குதித்து வாலிபர் தற்கொலை

    ஊட்டி அருகே கோரிசோலா அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த விஜயராஜன் என்பவரது மகன் டேனியல் (வயது 23). இவர் கடந்த ஓராண்டாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. 

    இதுகுறித்து பெற்றோர் மகனை காணவில்லை என்று ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கோரிசோலா அணையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அணையில் குதித்து தற்கொலை செய்தது டேனியல் என்பது தெரியவந்தது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் வலிப்பு நோய் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×