search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் ஆய்வு செய்தார்
    X
    நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் ஆய்வு செய்தார்

    நாகூர் தர்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை

    நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
    நாகை:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது.

    பின்னர் நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    நாகூர் தர்காவில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்

    மழையால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தொப்பி அணிந்தபடி முதலமைச்சர் கலந்து கொண்டார்.
    Next Story
    ×