என் மலர்
செய்திகள்

21 போலீஸ் நிலையங்களில் போலீசார் ஓய்வெடுக்க பெட்டுடன் கூடிய படுக்கை வசதி
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 5 போலீஸ் சப்- டிவிஷன்களில் 40 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
சட்ட ஒழுங்கை காக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சோதனைசாவடிகள், வாகன தணிக்கை என்று 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி முடிந்து சோர்வடையும் போலீசாருக்கு போலீஸ் நிலையத்திலேயே ஓய்வு எடுக்க ஓய்வறை உள்ளது. ஆனால் போதிய வசதி இல்லாததால் ஓய்வெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திலும் பெட் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கட்டில், பெட்டுடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.பி.தங்கதுரை கூறும் போது, மாவட்டத்தில் போலீசார் ஓய்வு எடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கட்டில் உடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த படுக்கை வசதி போலீஸ் நிலையங்களுக்கு தகுந்தாற் போல் மாறுபடும்.
பணி முடிந்து வரும் போலீசார் இரவு ரோந்து முடிந்து வரும் போலீசார் சில மணி நேரம் ஓய்வெடுக்க பயன்படுத்தி கொள்ளலாம். பணி நேரத்தில் தலைவலி, உடல்வலி ஏற்பட்டால் தாங்கள் பணிபுரியும் போலீஸ் நிலையத்திலேயே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளலாம்.
தற்போது மாவட்டம் முழுவதும் 21 போலீஸ் நிலையங்களில் இந்த கட்டில் உடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிபடியாக மற்ற போலீஸ் நிலையத்துக்கும் இந்த வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.






