என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் ரத்து- பயணிகள் அவதி
Byமாலை மலர்5 Dec 2020 8:07 AM GMT (Updated: 5 Dec 2020 8:07 AM GMT)
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு, சாம் ராஜ்நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ் நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று பந்த் நடந்து வருகிறது. மராட்டியர்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு கர்நாடக பாரதிய ஜனதா அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்து அங்கு பந்த் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்று காலை முதல் மாலை வரை பஸ்கள் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாது என அரசு போக்குவரத்து துறை அறிவித்தது.
அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு, சாம் ராஜ்நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மற்றும் பண்ணாரி வரை மட்டுமே பஸ்கள் சென்று வந்தன. மேலும் கர்நாடகா மாநில பஸ்களும் அங்கு செல்லாமல் சத்தியமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டன.
இதனால் சத்தியமங்கலம் பகுதி பயணிகள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல வேண்டிய பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் செல்லும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பாதுகாப்பு கருதி இன்று காலை பண்ணாரி சோதணை சாவடி பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரோட்டோரம் வாகனங்கள் அணி வகுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ் நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று பந்த் நடந்து வருகிறது. மராட்டியர்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு கர்நாடக பாரதிய ஜனதா அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்து அங்கு பந்த் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்று காலை முதல் மாலை வரை பஸ்கள் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாது என அரசு போக்குவரத்து துறை அறிவித்தது.
அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு, சாம் ராஜ்நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மற்றும் பண்ணாரி வரை மட்டுமே பஸ்கள் சென்று வந்தன. மேலும் கர்நாடகா மாநில பஸ்களும் அங்கு செல்லாமல் சத்தியமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டன.
இதனால் சத்தியமங்கலம் பகுதி பயணிகள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல வேண்டிய பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் செல்லும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பாதுகாப்பு கருதி இன்று காலை பண்ணாரி சோதணை சாவடி பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரோட்டோரம் வாகனங்கள் அணி வகுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X