என் மலர்
செய்திகள்

கவர்னர் கிரண்பேடி
இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.54 கோடி செலுத்த கவர்னர் உத்தரவு
இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.54 கோடி செலுத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி மத்திய அரசு உத்தரவின் படி இலவச அரிசிக்கு பதில் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த உத்தரவிட்டார். இதற்கு ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து வங்கி கணக்கில் தான் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த ரூ.54 கோடிக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி 1லட்சத்து 75 ஆயிரம் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.2,200, 1லட்சத்து 50 ஆயிரம் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். கொரோனா காலத்திற்கு, மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு மாதம் தலா 5 கிலோ அரிசிக்கான பணம் வீதம் 8 மாத காலத்திற்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






