என் மலர்
செய்திகள்

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
புதுவையில் கொரோனா அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எச்சரித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 126 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் 314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 29 ஆயிரத்து 907 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 479 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 35 ஆயிரத்து 675 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 510 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,130 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 33 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
598 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 493 பேர் புதுச்சேரியையும், 55 பேர் காரைக்காலையும், 43 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு என்பது 1.68 சதவீதமாகவும், குணமடைவது 93.73 சதவீதமாகவும் (சுமார் 94 சதவீதம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் மக்கள் கூடியதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. புதுவையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 126 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் 314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 29 ஆயிரத்து 907 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 479 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 35 ஆயிரத்து 675 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 510 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,130 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 33 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
598 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 493 பேர் புதுச்சேரியையும், 55 பேர் காரைக்காலையும், 43 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு என்பது 1.68 சதவீதமாகவும், குணமடைவது 93.73 சதவீதமாகவும் (சுமார் 94 சதவீதம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் மக்கள் கூடியதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. புதுவையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.
Next Story






