search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு- அரசு ஊழியருக்கு வலைவீச்சு

    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாக வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலூர்:

    காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காட்பாடியை அடுத்த பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகமானார். மணிகண்டன் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார்.

    முதலில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிஉள்ளது. அதைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் மணிகண்டன் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் மணிகண்டன் பல்வேறு தவணைகளில் இளம்பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பெற்றுள்ளார்.

    இளம்பெண் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் மீண்டும் திருமணம் செய்யும்படி கூறிஉள்ளார். ஆனால் அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் செல்போன் மற்றும் நேரில் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகிறார்.
    Next Story
    ×