என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
Byமாலை மலர்1 Nov 2020 8:32 AM GMT (Updated: 1 Nov 2020 8:32 AM GMT)
நாகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இதைத்தொடர்ந்து தகுந்த நேரத்தில் தனது(ரஜினி) மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாகை புதிய, பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய வள்ளலே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் ஏற்பட வா, என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இதனால் நாகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X