என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 44 பவுன் தங்க நகைகள் கொள்ளை
Byமாலை மலர்28 Oct 2020 6:49 AM GMT (Updated: 28 Oct 2020 6:49 AM GMT)
கோவை சுந்தராபுரம் அருகே மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 44 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குனியமுத்தூர்:
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முத்தையா நகரை சேர்ந்தவர் நிகாஷ் (வயது 29). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார்.
அவர் தற்போது காங்கேயத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நிகாஷின் மனைவிக்கு கடந்த 24-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நிகாஷ் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நிகாசுக்கு தகவல் தெவித்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 44 பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த நிகாஷ் இது குறித்து போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 44 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள 2 வீட்டின் கதவுகளை மர்மநபர்கள் உடைத்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அந்த வீடுகளில் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரிய வந்தது. ஒரே பகுதியில் 3 வீடுகளின் கதவுகளை மர்மநபர்கள் உடைத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முத்தையா நகரை சேர்ந்தவர் நிகாஷ் (வயது 29). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார்.
அவர் தற்போது காங்கேயத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நிகாஷின் மனைவிக்கு கடந்த 24-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நிகாஷ் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நிகாசுக்கு தகவல் தெவித்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 44 பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த நிகாஷ் இது குறித்து போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 44 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள 2 வீட்டின் கதவுகளை மர்மநபர்கள் உடைத்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அந்த வீடுகளில் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரிய வந்தது. ஒரே பகுதியில் 3 வீடுகளின் கதவுகளை மர்மநபர்கள் உடைத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X