search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    மொபைல் போன் அக்கா வழங்காததால் வி‌ஷம் குடித்த தம்பி மரணம்

    ஆன்லைனில் பாடம் படிக்க அக்கா மொபைல் போன் கொடுக்க மறுத்ததால் தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த சின்ன மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் திம்மப்பா. இவரது மகன் திலீப் (வயது 14). கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திலீப், பள்ளி பாடத்தை ஆன்லைனில் படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி பாடத்தை படிப்பதற்காக தனது அக்காவிடம் மொபைல் போனை கேட்டுள்ளார். அதற்கு அக்கா, தானும் ஆன்லைனில் பாடம் படிக்க வேண்டியுள்ளது என்று கூறி திலீப்பிடம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த திலீப் வீட்டில் இருந்த போது திடீரென பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், தீலிப்பை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சையில் இருந்த திலீப் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அக்கா மொபைல் போன் கொடுக்க மறுத்ததால் தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×