என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 மாதங்களுக்கு பிறகு புதுவையில் மீண்டும் மதுபார்கள் இன்று முதல் திறப்பு
Byமாலை மலர்1 Oct 2020 10:31 AM GMT (Updated: 1 Oct 2020 10:31 AM GMT)
புதுச்சேரியில் இன்று முதல் மதுபார்கள் திறக்க கலெக்டர் அருண், கலால் துறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி உள்ளார். நள்ளிரவில் அனுமதி வழங்கப்பட்டதால் ஒரேநேரத்தில் அனைத்து பார்களும் திறக்கப்படவில்லை.
புதுச்சேரி:
கொரோனா ஊரடங்கு பரவ தொடங்கிய மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 24-ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவையில் 23-ந் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலானது.
பொது போக்குவரத்து, மதுகடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், விடுதிகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதன்பின் மத்திய அரசு மே மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளித்து வருகிறது.
3 மாதத்திற்கு பிறகு மே மாத இறுதியில் 25-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. முதல் 3 மாதத்திற்கு வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பால் புதுவையில் மதுபானங்கள் விலை தமிழகத்திற்கு இணையாக உயர்ந்தது. மதுபானங்கள் விலை உயர்வு, பார்கள் திறக்காதது, பொது போக்குவரத்து ரத்து ஆகியவற்றால் மது அருந்த புதுவைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் மேலும் 3 மாதத்திற்கு மது பானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5-ம் கட்டமாக தற்போது ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்களை 50 சதவீத இருக்கை வசதியுடன் திறக்கலாம். பள்ளி, கல்லூரிகளை படிப்படியாக திறக்கலாம் என புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் மதுபார்கள் திறக்க கலெக்டர் அருண், கலால் துறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், நள்ளிரவில் அனுமதி வழங்கப்பட்டதால் ஒரேநேரத்தில் அனைத்து பார்களும் திறக்கப்படவில்லை.
மதுபார்களை சுத்தப்படுத்தும் பணி, சமூக இடைவெளியின்படி இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகளில் மது பார் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மதுபார்கள் இன்று திறக்கப்பட்டது.
மேலும் நாளை காந்தி ஜெயந்தி என்பதால் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும். பொது போக்குவரத்துக்கு தடை, மதுபான விலை உயர்வு நீடிப்பதால் கடந்த காலத்தைபோல மது பிரியர்கள் புதுவைக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு பரவ தொடங்கிய மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 24-ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவையில் 23-ந் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலானது.
பொது போக்குவரத்து, மதுகடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், விடுதிகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதன்பின் மத்திய அரசு மே மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளித்து வருகிறது.
3 மாதத்திற்கு பிறகு மே மாத இறுதியில் 25-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. முதல் 3 மாதத்திற்கு வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பால் புதுவையில் மதுபானங்கள் விலை தமிழகத்திற்கு இணையாக உயர்ந்தது. மதுபானங்கள் விலை உயர்வு, பார்கள் திறக்காதது, பொது போக்குவரத்து ரத்து ஆகியவற்றால் மது அருந்த புதுவைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் மேலும் 3 மாதத்திற்கு மது பானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5-ம் கட்டமாக தற்போது ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்களை 50 சதவீத இருக்கை வசதியுடன் திறக்கலாம். பள்ளி, கல்லூரிகளை படிப்படியாக திறக்கலாம் என புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் மதுபார்கள் திறக்க கலெக்டர் அருண், கலால் துறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், நள்ளிரவில் அனுமதி வழங்கப்பட்டதால் ஒரேநேரத்தில் அனைத்து பார்களும் திறக்கப்படவில்லை.
மதுபார்களை சுத்தப்படுத்தும் பணி, சமூக இடைவெளியின்படி இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகளில் மது பார் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மதுபார்கள் இன்று திறக்கப்பட்டது.
மேலும் நாளை காந்தி ஜெயந்தி என்பதால் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும். பொது போக்குவரத்துக்கு தடை, மதுபான விலை உயர்வு நீடிப்பதால் கடந்த காலத்தைபோல மது பிரியர்கள் புதுவைக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X