என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சூளகிரி அருகே விவசாயி அடித்து கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள வத்தல பள்ளி அருகே சஞ்சீவபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). விவசாயி. இவருக்கு எல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நாராயணன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இரவு படுத்து உறங்குவது வழக்கம்.

    இதேபோல் நேற்று இரவு தோட்டத்திற்கு சென்றார். அங்கு மூன்று பேருடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் இரவு எல்லம்மாள், நாராயணனுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். உணவை வாங்கிய நாராயணன் திட்டி அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

    பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் எல்லம்மாள் தோட்டத்திற்கு வந்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் நாராயணன் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த எல்லம்மாள் கதறி அழுதார்.

    இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் நாராயணன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணனுடன் மது அருந்திய அந்த மூன்று பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் சூளகிரி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×