search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 20 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 414 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 308, காரைக்காலில் 74, ஏனாமில் 29, மாகியில் 3 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது ஆயிரத்து 411, காரைக்காலில் 88, ஏனாமில் 203, மாகியில் 19 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று ஒரே நாளில் புதுவையில் 423, காரைக்காலில் 20, மாகியில் 4 பேர் என மொத்தம் 447 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 20 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயிரத்து 721 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 15 ஆயிரத்து 27 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 2 ஆயிரத்து 665, காரைக்காலில் 290, ஏனாமில் 120 பேர், மாகியில் 9 பேர் என 3 ஆயிரத்து 84 பேர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 385 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    புதுவை கதிர்காமம் மருத்துவமனை, ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர், காரைக்காலில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலினின்றி இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.

    இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×