என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துரைப்பாக்கத்தில் பரோட்டா சாப்பிட்ட 12 வயது சிறுவன் திடீர் மரணம்
Byமாலை மலர்12 Sep 2020 2:03 AM GMT (Updated: 12 Sep 2020 2:03 AM GMT)
ஓட்டலில் பரோட்டா மற்றும் பிரியாணி சாப்பிட்ட 12 வயது சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பாரிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் தினேஷ் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தினேஷ், பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
சற்று நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் துடிதுடித்தார். உடனடியாக அவரை சீவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நள்ளிரவில் மீண்டும் வலியால் துடித்து சிறுவன் திடீரென மயங்கினான். உடனடியாக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தினேசின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பாரிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் தினேஷ் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தினேஷ், பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
சற்று நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் துடிதுடித்தார். உடனடியாக அவரை சீவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நள்ளிரவில் மீண்டும் வலியால் துடித்து சிறுவன் திடீரென மயங்கினான். உடனடியாக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தினேசின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X