என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் இன்று மேலும் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    புதுச்சேரியில் இன்று மேலும் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,766 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 69,921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவில் இதுவரை 36,91,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,39,883 பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 65,288 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று 65,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 28,39,882 பேருடன் 76.63 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 21.59 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1.78 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,766 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 9,675 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×