என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,434 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 75,760 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33,10,235 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1023 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 56,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,23,772 பேர் குணமடைந்தள்ளனர். 7,25,991 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,472 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 9,24,998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 76.24 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 1.83 ஆகவும், சிகிச்சை பெற்ற வருபவர்களின் சதவீதம் 21.93 ஆகவும் உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,434 ஆக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரியில் இதுவரை 7,761 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக 190 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×