என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X
    போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    மத்திய, மாநில அரசுகளின் தனியார் மயமாக்கும் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி நகர கிளை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மத்திய சங்க பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர்கள் முருகன், வரதராஜன், துணைத்தலைவர் பார்த்தீபன் மற்றும் பணிமனை நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. உமர்பாரூக், ஜான் லுயிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஏ-வை கைவிட வேண்டும். தனியார் பஸ்சை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்த வேண்டாம். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும். தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும். பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் தவமணி, ஏ.ஐ.டி.யு.சி. வரதராஜ், ஏ.ஏ.எல்.எப். அண்ணாமலை, டி.டி.எஸ்.எப். மயில்சாமி மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×