என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,859 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 06 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புகளுக்கு 7 லட்சத்து 10 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 57,468 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 23 லட்சத்து 38 ஆயிரத்து 036 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் 836 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,542 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. நேற்று 6,09,917 கொரோனா பரிசோதனைகள் நடந்தன.  இதன்மூலம் இது வரையில் 3 கோடியே 59 லட்சத்து 02 ஆயிரத்து 137 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,859 ஆக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரியில் இதுவரை 164 பேர் உயிரிழந்த நிலையில் 6,942 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    Next Story
    ×