என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை தேவை- கவர்னர் வேண்டுகோள்
Byமாலை மலர்15 Aug 2020 6:13 AM GMT (Updated: 15 Aug 2020 6:13 AM GMT)
கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை தேவை என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாம் இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். தற்போது சக்தி, பணம் மற்றும் முன் தடுப்பு என்பது தேவையான ஒன்றாகும். நமது மூத்தோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை இழந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு மோசமான நிலை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால்தான் இதை தவிர்க்கலாம். இதற்கு தலைவர்கள், அமைச்சர்கள் உதாரணமாக இருக்கவேண்டும். அவர்கள் அதிகாரிகளை தங்களது அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து ஆலோசிக்குமாறு அழைக்கக் கூடாது. பல அலுவலகங்கள் மூடிய நிலையில் குளிரூட்டப்பட்டவையாக உள்ளன. இதனால் அதனுள் உள்ள காற்றே திரும்ப திரும்ப சுற்றி சுழன்று வருகிறது. இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது சமீப காலத்தில் நடந்தும் உள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X