search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் துப்பாக்கிச்சூடு
    X
    போலீசார் துப்பாக்கிச்சூடு

    புதுக்கோட்டையில் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு

    புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே போசம்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    தேர்தல் முன்விரோதத்தால் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×