search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    புதுச்சேரியில் இன்று காலை மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து 9,06,752 ஆக உள்ளது.

    5,71,460 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23,727 பேர் (கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர்) உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று காலை மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக 684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து 829 பேர் குணமடைந்துள்ளனர்.  சிகிச்சை பலனின்றி 18  பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×