search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பிரவீன்நாயர்
    X
    கலெக்டர் பிரவீன்நாயர்

    நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி- கலெக்டர் தகவல்

    நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி தேசிய மாதிரி ஆய்வு திட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    குடும்பத்தின் ஆண்டு செலவு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அடிப்படை வசதி, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் 78-வது சுற்றில் மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 4 நகர்ப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    மக்களுக்கு தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் கேட்கும் விவரங்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×