என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்7 July 2020 11:33 AM GMT (Updated: 7 July 2020 11:33 AM GMT)
நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி தேசிய மாதிரி ஆய்வு திட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
குடும்பத்தின் ஆண்டு செலவு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அடிப்படை வசதி, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் 78-வது சுற்றில் மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 4 நகர்ப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மக்களுக்கு தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் கேட்கும் விவரங்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி தேசிய மாதிரி ஆய்வு திட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
குடும்பத்தின் ஆண்டு செலவு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அடிப்படை வசதி, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் 78-வது சுற்றில் மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 4 நகர்ப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மக்களுக்கு தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் கேட்கும் விவரங்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X