என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கால் தவித்த முதியவர்களுக்கு உதவிய போலீசார்

    ஊரடங்கால் தவித்த முதியவர்களுக்கு உதவிய போலீசாரை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    செந்துறை:

    தமிழகம் முழுவதும் நேற்று எந்த வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனை அறியாமல் முதியவர்கள் சிலர் செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து இருந்தனர்.

    இதனை கண்ட கொரோனா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் ஊரடங்கு தெரியாமல் வந்து பேருந்துக்காக காத்து இருப்பதாகவும் உணவு இன்றி தவிப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உத்தரவின்பேரில் செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் உணவு கொடுத்து அவர்களிடம் விசாரித்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இந்த சமூக சேவைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    Next Story
    ×