என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி- கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்4 July 2020 11:42 AM GMT (Updated: 4 July 2020 11:42 AM GMT)
நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் நாகை மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் வழிந்தோடி கடுவையாற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் உள்ள வடிகாலில் பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் கொள்ளிடம் அருகே எருக்கூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் எந்த ரசாயனமும் இல்லை. இருப்பினும் வடிகாலில் தேங்கிய கழிவுநீர் அகற்றப்படும்’ என்றார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையா, ஊராட்சி செயலாளர் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜா, சின்னமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிக்கான வரைபட மாதிரியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் நாகை மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் வழிந்தோடி கடுவையாற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் உள்ள வடிகாலில் பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கழிவு நீரை முழுவதுமாக வெளியேற்றும் வகையில் வடிகாலை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கழிவுநீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்த பகுதியில் சுகாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கொள்ளிடம் அருகே எருக்கூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் எந்த ரசாயனமும் இல்லை. இருப்பினும் வடிகாலில் தேங்கிய கழிவுநீர் அகற்றப்படும்’ என்றார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையா, ஊராட்சி செயலாளர் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜா, சின்னமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X