என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்1 July 2020 6:25 AM GMT (Updated: 1 July 2020 6:25 AM GMT)
தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது.
தா.பழூர்:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால் தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது. தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தா.பழூர் கடை வீதியில் நேற்று அதிரடியாக ஆய்வு செய்து அபராதம் விதித்தது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X