search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம் வழங்கப்பட்டது.
    X
    முககவசம் வழங்கப்பட்டது.

    முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது.
    தா.பழூர்:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.

    இதனால் தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது. தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தா.பழூர் கடை வீதியில் நேற்று அதிரடியாக ஆய்வு செய்து அபராதம் விதித்தது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
    Next Story
    ×