என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    X
    சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    அரியலூர் மாவட்ட சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்ட சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோதனைச்சாவடிகளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் போலீசாரிடம் முககவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவைகள் இருப்பில் உள்ளனவா?, வாகனங்களின் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    சோதனை சாவடிகளில் முறையான ஆய்வுக்குப்பின் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் தலைக்கவசத்துடன், முககவசம் அணிந்து வருமாறு உத்தரவிட்டார்.

    Next Story
    ×