என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரியில் ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 618ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,52,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 74,622 பேருக்கும், டெல்லியில் 77,240 பேருக்கும், குஜராத்தில் 30,095 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 618ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×