என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
    X
    ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

    சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை சம்பளம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுலா வளர்ச்சி கழக கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சுற்றுலா துறை இயக்குனர் அலுவலகம் முன்பு கடந்த 5 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 6-வது நாளாக நேற்றும் அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அதன்படி சுற்றுலாத்துறை அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் கஜபதி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    இதேபோல் காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் நிறுவனம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். சம்பளம் வழங்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என சுற்றுலா வளர்ச்சிகழக சம்மேளனம் காரைக்கால் தலைவர் ரோலண்ட், செயலர் அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×