search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் 16-வது நாளாக உண்ணாவிரதம்

    வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் 16-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதம் காரணமாக சுமார் 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

    அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உடல்நிலை சோர்வடைந்தால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று 16-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதம் காரணமாக சுமார் 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அவரிடம் உண்ணாவிரத்தை கைவிடும்படி ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முருகனின் உடல்நிலை குறித்து தினமும் சென்னை ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×