என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 216 ஆக உயர்வு

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் 216 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-

    புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். 99 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

    நவம்பர், டிசம்பரில் நோய் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது என்றும், மே மாதம் முதல் ஜூன் வரை நோய் தொற்று சராசரியாக 7% இருந்தது. இந்த வாரம் மட்டும் 10% இருக்கிறது. அதனால் டிசம்பரில் அதிகமாக கூடும். இதனால் 6 மாதங்களுக்கு நோய் தடுப்புக்கு தயாராக சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதல்வரை கேட்க உள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார். 
    Next Story
    ×