என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
மேலும் 4 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு
புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி மேலும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த சண்முகாபுரம் விநாயகர் கோவில் வீதி, தட்டாஞ்சாவடி மங்கலட்சுமி நகர் சிந்து வீதி, கணுவாப்பேட்டை புதுநகர் 5-வது குறுக்குத்தெரு ஒருபகுதி, மாகி காவலர் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு வளாகம் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,548 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று விதி மீறலுக்காக நேற்று ஒரே நாளில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் ரூ.7,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி மேலும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த சண்முகாபுரம் விநாயகர் கோவில் வீதி, தட்டாஞ்சாவடி மங்கலட்சுமி நகர் சிந்து வீதி, கணுவாப்பேட்டை புதுநகர் 5-வது குறுக்குத்தெரு ஒருபகுதி, மாகி காவலர் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு வளாகம் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,548 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று விதி மீறலுக்காக நேற்று ஒரே நாளில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் ரூ.7,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






