search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- திருமாவளவன் வழங்கினார்

    அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள்,பருப்பு,சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் சிதம்பரம் மக்களவை உறுப்பினரும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு,தனது சொந்த நிதியில் இருந்து அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள்,பருப்பு,சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×