என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுவையில் கொரோனா பாதிப்பு 100-ஐ எட்டுகிறது

    புதுவையில் ஆரம்ப கட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து 100-ஐ எட்டும் நிலையை அடைந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனை, ஜிப்மரில் ஏற்கனவே 90 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.

    இதில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது 57 பேர் நேற்றைய தினம் சிகிச்சையில் இருந்தனர்.

    புதுவையின் மற்ற பிராந்தியங்களான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று நோயாளிகள் யாரும் இல்லை.

    இந்த நிலையில் இன்றைய தினம் புதுவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள்.

    இதனால் புதுவையில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 64 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு தளர்விற்கு பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    ஆரம்ப கட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து 100-ஐ எட்டும் நிலையை அடைந்துள்ளது.

    Next Story
    ×