என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை சட்டசபை விரைவில் கூடுகிறது
Byமாலை மலர்3 Jun 2020 6:38 AM GMT (Updated: 3 Jun 2020 6:38 AM GMT)
அடுத்த மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கு புதிதாக பட்ஜெட் போட வேண்டும் என்பதால் புதுவை சட்டசபை விரைவில் கூட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூன்று மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதத்துடன் பட்ஜெட் தொகை செலவிடப்பட்டுவிடும். அடுத்த மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கு புதிதாக பட்ஜெட் போட வேண்டும். இதற்காக புதுவை சட்டசபை விரைவில் கூட உள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டு உள்ளார். அந்த கடிதத்தில் பட்ஜெட், வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூன்று மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதத்துடன் பட்ஜெட் தொகை செலவிடப்பட்டுவிடும். அடுத்த மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கு புதிதாக பட்ஜெட் போட வேண்டும். இதற்காக புதுவை சட்டசபை விரைவில் கூட உள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டு உள்ளார். அந்த கடிதத்தில் பட்ஜெட், வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X