என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் மேலும் 4 பேருக்கு கொரோனா
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரியில் 28 பேரும், ஜிப்மரில் 5 பேரும் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இன்று புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் மூலம் அவன் தாயாருக்கு கொரோனா தொற்று வந்து உள்ளது. வில்லியனூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கடந்த 6 மாதமாக எங்கும் செல்லவில்லை. அவருக்கு எப்படி தொற்று வந்தது? என்பது குறித்து சுகாதாரத்துறை விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
கோரிமேட்டில் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வளைகாப்பு செய்த பெண்மணிக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது.
காலாப்பட்டை சேர்ந்த டாக்டர் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு புதுவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இல்லை. ஆனால், அவர் சேலம் சென்ற பின்பு அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கதிர்காமத்தில் 30 பேரும், ஜிப்மரில் 6 பேரும், சேலத்தில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்