search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அருண்
    X
    கலெக்டர் அருண்

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காணொலி காட்சியில் பாடம்- கலெக்டர் அருண்

    ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கல்வித்துறை வளாகத்தில் உள்ள மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் நடந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சியில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் கேட்ட 90 கேள்விகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    ஒளிப்பதிவு செய்த பாடங்கள், கேள்வி- பதில்கள் கல்வித்துறையின் யூ.டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 844 பேர் யூ.டியூப் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். யூ.டியூப் வழியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 226-ஐ கடந்துள்ளது.

    கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க இணையவழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மே 24-ந்தேதி வரை ஆயிரத்து 68 கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தியுள்ளனர்.

    இதன்மூலம் 30 ஆயிரத்து 671 ஆசிரிய நேரம் மற்றும் 7 லட்சத்து 12 ஆயிரத்து 796 மாணவ நேரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×