என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காணொலி காட்சியில் பாடம்- கலெக்டர் அருண்
புதுச்சேரி:
புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கல்வித்துறை வளாகத்தில் உள்ள மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் நடந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சியில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் கேட்ட 90 கேள்விகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
ஒளிப்பதிவு செய்த பாடங்கள், கேள்வி- பதில்கள் கல்வித்துறையின் யூ.டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 844 பேர் யூ.டியூப் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். யூ.டியூப் வழியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 226-ஐ கடந்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க இணையவழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மே 24-ந்தேதி வரை ஆயிரத்து 68 கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தியுள்ளனர்.
இதன்மூலம் 30 ஆயிரத்து 671 ஆசிரிய நேரம் மற்றும் 7 லட்சத்து 12 ஆயிரத்து 796 மாணவ நேரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்