என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்
Byமாலை மலர்21 May 2020 7:57 AM GMT (Updated: 21 May 2020 7:57 AM GMT)
நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.17 அடியாக உள்ளது. சென்னைக்கு 51 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வீராணம் ஏரியில் உள்ள நீர் ஆவியாகி செல்கிறது. இதன் காரணமாக நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். கோடை மழை பெய்தால் மட்டும் கூடுதல் தண்ணீர் அனுப்ப ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.17 அடியாக உள்ளது. சென்னைக்கு 51 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வீராணம் ஏரியில் உள்ள நீர் ஆவியாகி செல்கிறது. இதன் காரணமாக நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். கோடை மழை பெய்தால் மட்டும் கூடுதல் தண்ணீர் அனுப்ப ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X