என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுவையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா
அபுதாபியில் இருந்து புதுவை திரும்பிய 4 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதில் தந்தை- மகன் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஏற்கனவே க.குச்சிப்பாளையம் மற்றும் செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அவருடைய மனைவி, குழந்தை மற்றும் தனியார் நிறுவன ஊழியருடன் தொடர்புடைய பண்டசோழநல்லூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய 4 பேரும் கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு அரும்பார்த்தபுரம் ஊழியருடன் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த பைனான்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து புதுவை திரும்பிய 4 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதில் தந்தை- மகன் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 2 பேரின் பரிசோதனை முடிவு இன்று மாலை தெரிய வரும். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
புதுவையில் ஏற்கனவே க.குச்சிப்பாளையம் மற்றும் செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அவருடைய மனைவி, குழந்தை மற்றும் தனியார் நிறுவன ஊழியருடன் தொடர்புடைய பண்டசோழநல்லூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய 4 பேரும் கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு அரும்பார்த்தபுரம் ஊழியருடன் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த பைனான்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து புதுவை திரும்பிய 4 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதில் தந்தை- மகன் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 2 பேரின் பரிசோதனை முடிவு இன்று மாலை தெரிய வரும். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
Next Story






