என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுச்சேரி விமான நிலைய ஊழியருக்கு கொரோனா - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
கேரளாவுக்கு சென்ற புதுச்சேரி விமான நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி கென்னடி கார்டனை சேர்ந்த 28 வயது இளைஞர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் மோட்டார் சைக்கிளிலேயே கண்ணூர் சென்றுள்ளார். அப்போது கடந்த 16-ந் தேதியன்று விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவர் சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். மேலும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி கென்னடி கார்டனை சேர்ந்த 28 வயது இளைஞர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் மோட்டார் சைக்கிளிலேயே கண்ணூர் சென்றுள்ளார். அப்போது கடந்த 16-ந் தேதியன்று விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவர் சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். மேலும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






