என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
    X
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    புதுவையில் ஊரடங்கு தொடருவதற்கு வாய்ப்பு- அமைச்சர் சூசக தகவல்

    பிரதமர் ஊடரங்கை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறி இருப்பதால் புதுவையிலும் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்புபவர்களுக்கு 2 முறை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். பிரதமர் மோடி நேற்றைய தினம் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் பேசினார்.

    சுமார் 5½ மணி நேரம் நடந்த இந்த பேச்சின்போது புதுவை முதல்-அமைச்சர் தினமும் புதுவை மாநிலத்திற்கு தேவையான அனைத்து வி‌ஷயங்களையும் எடுத்துக் கூறினார்.

    பிரதமரின் பேச்சை பார்க்கும்போது, மே 17-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு இன்னும் சில தளர்வுகளுடன் தொடரும் என்றே தெரிகிறது

    3-வது கட்ட ஊரடங்கில் இதுவரை 12 நாட்கள் முடிந்துவிட்டது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது பொதுமக்கள் தொடர்ந்து ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்டை மாவட்டங்களான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் புதுவை மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் பணியாற்ற கூடிய நர்சுகளுக்கு என்னுடைய செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

    பிரதமர் ஊடரங்கை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கூறி இருப்பதால் புதுவையிலும் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×