என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நெல்லிக்குப்பத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற குடையுடன் கடைக்கு வந்த பொதுமக்கள்.
குடையுடன் வந்தால்தான் பொருட்கள் கிடைக்கும்- நெல்லிக்குப்பம் போலீசார் அறிவிப்பு
By
மாலை மலர்29 April 2020 2:34 PM GMT (Updated: 29 April 2020 2:34 PM GMT)

கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் குடையுடன் வந்தால்தான் பொருட்கள் கிடைக்கும் என்று நெல்லிக்குப்பம் போலீசார் அறிவித்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர்.
அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனை சரி செய்வதற்காக நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் பொதுமக்கள் கடைக்கு வரும்போது கட்டாயம் குடையை எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
குடை எடுத்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். இல்லையெனில் கடை சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தார்.
குடையுடன் வருபவர்கள் எப்படியும் சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள் என்ற நோக்கத்தில் போலீசார் இந்த முறையை கையாண்டுள்ளனர். அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும்போது குடையுடன் வந்து சமூக இடைவெளியை கடை பிடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
