என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை
புதுவை சட்டமன்ற வளாகத்தில் இன்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று புதுவை சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறை தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு உடைகளுடன் 4 டாக்டர்கள், 2 உதவி டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் பணியில் இருந்தனர். காலை 10 மணிக்கு சபாநாயகர் சிவகொழுந்து பரிசோதனையை தொடங்கி வைத்தார். சபாநாயகர் சிவகொழுந்துவின் தொண்டை பகுதியில் உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, பாஸ்கர், சாமிநாதன், சங்கர் ஆகியோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
இவர்களிடம் சேகரிக்கப்பட்ட உமிழ்நீர் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனையில் பங்கேற்ற அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி சோதனை செய்த டாக்டர்களின் கால்களில் விழுந்து தங்களின் சேவை பாராட்டுக்குரியது எனகூறி நன்றி தெரிவித்தார். பரிசோதனைக்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செயலார் பிரசாந்தகுமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று புதுவை சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறை தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு உடைகளுடன் 4 டாக்டர்கள், 2 உதவி டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் பணியில் இருந்தனர். காலை 10 மணிக்கு சபாநாயகர் சிவகொழுந்து பரிசோதனையை தொடங்கி வைத்தார். சபாநாயகர் சிவகொழுந்துவின் தொண்டை பகுதியில் உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, பாஸ்கர், சாமிநாதன், சங்கர் ஆகியோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
இவர்களிடம் சேகரிக்கப்பட்ட உமிழ்நீர் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனையில் பங்கேற்ற அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி சோதனை செய்த டாக்டர்களின் கால்களில் விழுந்து தங்களின் சேவை பாராட்டுக்குரியது எனகூறி நன்றி தெரிவித்தார். பரிசோதனைக்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செயலார் பிரசாந்தகுமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
Next Story






