என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி- புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுவையில் முற்றிலுமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு அண்டை மாநிலமான தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் பயணிகள் அதிகளவில் காணப்படுவர்.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி பொதுத்தேர்வு நடப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முற்றிலுமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
புதுவையில் எங்கும் சுற்றுலா பயணிகளை காண முடியவில்லை. புதுவையில் பல விடுதிகள் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது.
இறைச்சியின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவியது. இதனை சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இந்த பீதி குறையவில்லை. இதனால் கோழி இறைச்சி விலை படுவீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.180 முதல் 200 வரை விற்று வந்த கோழி இறைச்சி தற்போது ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.
புதுவைக்கு அண்டை மாநிலமான தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் பயணிகள் அதிகளவில் காணப்படுவர்.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி பொதுத்தேர்வு நடப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முற்றிலுமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
புதுவையில் எங்கும் சுற்றுலா பயணிகளை காண முடியவில்லை. புதுவையில் பல விடுதிகள் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது.
இறைச்சியின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவியது. இதனை சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இந்த பீதி குறையவில்லை. இதனால் கோழி இறைச்சி விலை படுவீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.180 முதல் 200 வரை விற்று வந்த கோழி இறைச்சி தற்போது ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.
Next Story






