என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்
    X
    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

    நாகையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல்

    நாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன.

    இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது வீட்டில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் வருவதை அறிந்த ராமதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகளை நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.
    Next Story
    ×