என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தலூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் - கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்28 Feb 2020 9:08 AM GMT (Updated: 28 Feb 2020 9:08 AM GMT)
பந்தலூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்ய உதவியதாக தாய் மற்றும் தங்கை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது20). இவர் அடிக்கடி செல்போனில் முகநூல் பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அஜித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் 2 பேரும் அடிக்கடி முகநூலில் பேசி வந்தனர். அப்போது ஒருநாள் அஜித்குமார் சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருருவரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அஜித்குமார் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் மாயமான சிறுமி அஜித்குமாருடன் பந்தலூருக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அஜித்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு கடத்தி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
பின்னர் எர்ணாகுளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. மேலும் சிறுமியை கடத்துவதற்கு அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை தேவாலா மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்துவதற்கு உதவிய அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை மீது போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது20). இவர் அடிக்கடி செல்போனில் முகநூல் பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அஜித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் 2 பேரும் அடிக்கடி முகநூலில் பேசி வந்தனர். அப்போது ஒருநாள் அஜித்குமார் சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருருவரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அஜித்குமார் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் மாயமான சிறுமி அஜித்குமாருடன் பந்தலூருக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அஜித்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு கடத்தி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
பின்னர் எர்ணாகுளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. மேலும் சிறுமியை கடத்துவதற்கு அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை தேவாலா மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்துவதற்கு உதவிய அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை மீது போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X