search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஸ்ரீமுஷ்ணம் அருகே முறைதவறிய காதலால் இளம்பெண் கொலை

    ஸ்ரீமுஷ்ணம் அருகே முறைதவறிய காதலால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ்பேட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி ராக்கினி. இவர்களது மகள் எழில் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குறிஞ்சி கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர் எழிலின் பெரியம்மாவின் மகன் ஆவார். இதனால் சுரேஷ்குமார் அடிக்கடி எழில் வீட்டுக்கு சென்றுவந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

    சுமார் 2 ஆண்டுகாலமாக சுரேஷ்குமாரும், எழிலும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் எழில் வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வயல்வேலைக்கு சென்றுவிட்டனர். அப் போது அங்கு சுரேஷ் குமார் எழில் வீட்டுக்கு வந்தார். 2 பேரும் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    திடீரென்று அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் எழிலை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    வயல்வேலைக்கு சென்று விட்டு மாலையில் அந்தோணிசாமி, அவரது மனைவி ராக்கினியும் வீட்டுக்கு வந்தனர். அப்போது கட்டிலுக்கு அடியில் மகள் எழில் முகத்தில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வீட்டுக்குள் பிணமாக கிடந்த எழிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் உறவினர் சுரேஷ்குமார் என்பவர் எழிலை கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அவர் ராமாபுரம் ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அங்கு சென்ற போலீசார் சுரேஷ் குமாரை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் எழிலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பின்பு போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். போலீசில் சுரேஷ்குமார் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    எனது தாய் சகாயமேரியின் தங்கை ராக்கினி ஆவர். அவரது மகள் எழில். இதனால் நான் அடிக்கடி ராக்கினி வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது எழிலுக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறியது. முறைதவறி நாங்கள் காதலித்து வந்தோம்.

    எழிலை சந்திக்கும்போது எல்லாம் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்து வந்தேன். நேற்றும் எழில் வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். உடனே நான் நாம் இருவரும் அண்ணன், தங்கை உறவாகும். இதனால் நாம் திருமணம் செய்து சேர்ந்து வாழமுடியாது என்று கூறினேன்.

    ஆனால் அவள் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது.

    என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இதுகுறித்து போலீசில் புகார் செய்வேன் என்று மிரட்டினாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எழிலை கொலைசெய்ய திட்டமிட்டேன். உடனே எழிலை தாக்கி கழுத்தை நெரித்தேன்.

    சிறிதுநேரத்தில் அவர் மூச்சிதிணறி இறந்து விட்டாள். இதை அறிந்த நான் பிணத்தை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் இந்தகொலையில் துப்புதுலக்கி என்னை பிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளம்பெண் கொலையில் குற்றவாளியை 2 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டி உள்ளார்.

    Next Story
    ×