என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வெங்கடேசன் - குழந்தைகளுடன் நிர்மலா
2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
By
மாலை மலர்4 Feb 2020 5:31 AM GMT (Updated: 4 Feb 2020 5:47 AM GMT)

வாலாஜா அருகே 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாலாஜா:
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4½ ஆண்டாகிறது. சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் நர்சிங் படித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நிர்மலாவுக்கும், அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த நிர்மலா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருமணமாகி 4½ ஆண்டுகளே ஆன நிலையில் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்தும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு பெங்களூருவில் இருந்து வெங்கடேசன், கொடைக்கல் கிராமத்திற்கு வந்தார்.
மனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். மனைவி இறந்து விட்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என வெங்கடேசன் அஞ்சியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை தனது 2 பெண் குழந்தைகளுடன் ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூருக்கு வந்தார். மனைவி சாவால் மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் அங்குதனது 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
3 பேரின் உடலும் ரெயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறி கிடந்தது.
இதுபற்றி தகவலறிந்த வாலாஜா ரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4½ ஆண்டாகிறது. சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் நர்சிங் படித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நிர்மலாவுக்கும், அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த நிர்மலா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருமணமாகி 4½ ஆண்டுகளே ஆன நிலையில் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்தும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு பெங்களூருவில் இருந்து வெங்கடேசன், கொடைக்கல் கிராமத்திற்கு வந்தார்.
மனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். மனைவி இறந்து விட்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என வெங்கடேசன் அஞ்சியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை தனது 2 பெண் குழந்தைகளுடன் ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூருக்கு வந்தார். மனைவி சாவால் மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் அங்குதனது 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
3 பேரின் உடலும் ரெயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறி கிடந்தது.
இதுபற்றி தகவலறிந்த வாலாஜா ரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
