என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
தேவகோட்டையில் மகள் செய்த செயலால் தற்கொலை செய்த தந்தை
தேவகோட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானதால் தந்தை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
தேவகோட்டை காந்திநகர் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பினார்.
பாண்டியின் மகள் உமா நந்தினிக்கு (22) வருகிற 5-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உமா நந்தினி மாயமாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டி, பல இடங்களிலும் மகளை தேடினார். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த பாண்டி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மகன் மணிகண்டன் புகாரின் பேரில், தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை காந்திநகர் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பினார்.
பாண்டியின் மகள் உமா நந்தினிக்கு (22) வருகிற 5-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உமா நந்தினி மாயமாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டி, பல இடங்களிலும் மகளை தேடினார். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த பாண்டி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மகன் மணிகண்டன் புகாரின் பேரில், தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






