என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட முருகன்
Byமாலை மலர்30 Dec 2019 7:22 AM GMT (Updated: 30 Dec 2019 7:22 AM GMT)
வேலூர் ஜெயிலில் உணவு சாப்பிட மறுத்து வந்த முருகன் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தனக்கு சிறையில் இடையூறுகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி கடந்த சில மாதங்களாக விட்டுவிட்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 21-ந்தேதி முதல் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். உறவினர்கள் கொண்டு வரும் உணவை தர அனுமதிக்க வேண்டும் என கோரி அவர் 9 நாட்களாக ஜெயிலில் உணவை சாப்பிட மறுத்தார். உண்ணாவிரதத்தால் அவரது எடை 64 கிலோவிலிருந்து 42 கிலோவாக குறைந்தது.
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்று அவருக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.
முருகனிடம் நேற்று மாலை ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன் ஜெயிலில் உணவு சாப்பிட அனுமதி அளித்தனர்.
மேலும் அவரை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து முருகன் போராட்டத்தை கைவிட்டார். ஜெயிலில் அவரே சமைத்து சாப்பிட அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரே சமைத்து சாப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தனக்கு சிறையில் இடையூறுகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி கடந்த சில மாதங்களாக விட்டுவிட்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 21-ந்தேதி முதல் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். உறவினர்கள் கொண்டு வரும் உணவை தர அனுமதிக்க வேண்டும் என கோரி அவர் 9 நாட்களாக ஜெயிலில் உணவை சாப்பிட மறுத்தார். உண்ணாவிரதத்தால் அவரது எடை 64 கிலோவிலிருந்து 42 கிலோவாக குறைந்தது.
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்று அவருக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.
முருகனிடம் நேற்று மாலை ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன் ஜெயிலில் உணவு சாப்பிட அனுமதி அளித்தனர்.
மேலும் அவரை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து முருகன் போராட்டத்தை கைவிட்டார். ஜெயிலில் அவரே சமைத்து சாப்பிட அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரே சமைத்து சாப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X